பதிவு செய்த நாள்
10 மார்2021
22:53
புதுடில்லி:இம்மாதம், 15ம் தேதியன்று, ‘ஐ.பி.ஓ.,’ எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், ‘லட்சுமி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், அதன் பங்கு விலையை, 129 – 130 ரூபாய் என நிர்ணயித்து, அறிவித்துள்ளது.
300 கோடி ரூபாய்சிறப்பு ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 600 கோடி ரூபாயை திரட்ட திட்ட மிட்டுள்ளது. பங்கு வெளியீடு, வரும், 15ம் தேதியன்று துவங்கி, 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
பங்கு வெளியீட்டின் போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்களின் பங்குகளையும், விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
நடவடிக்கை
மும்பையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும்; பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.லட்சுமி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ், கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன், வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|