பதிவு செய்த நாள்
11 மார்2021
23:19
புதுடில்லி:முதலீட்டாளர்கள், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில், தொடர்ந்து அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், 491 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, தங்க இ.டி.எப்., திட்டங்கள் கருதப்படுகின்றன. இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும்.
சர்வதேச அளவில் விலை குறைந்து வருவதாலும், ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதாலும், முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் கடந்த டிசம்பரில், 431 கோடி ரூபாயையும், ஜனவரியில் 625 கோடி ரூபாயையும், முதலீடு செய்துள்ளனர்.கடந்த ஆண்டில் மட்டும், தங்க இ.டி.எப்., திட்டங்கள், 6,656 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. இதற்கு முந்தைய, 2019ம் ஆண்டில், நிகர முதலீடு, வெறும், 16 கோடி ரூபாய் தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|