பதிவு செய்த நாள்
11 மார்2021
23:21
புதுடில்லி:எல்.இ.டி., ‘டிவி’களின் விலை, ஏப்ரல் மாதத்திலிருந்து, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில், எல்.இ.டி., ‘டிவி’களுக்கு தேவைப்படும், ‘ஓப்பன் செல் பேனல்’கள் விலை, 35 சதவீதம் அளவுக்கு, கடந்த ஒரு மாத காலத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவிலும், ‘டிவி’ விலை அதிகரிக்கும் என, கருதப்படுகிறது.
ஏற்கனவே, எல்.ஜி., உள்ளிட்ட, சில, ‘டிவி’ தயாரிப்பு நிறுவனங்கள், விலையை அதிகரித்துள்ள நிலையில், பானாசோனிக், ஹையர், தாம்ஸன் போன்ற நிறுவனங்கள், ஏப்ரல் மாதத்தில் இருந்து, ‘டிவி’ விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. ‘பானாசோனிக்’ நிறுவனம், ஏப்ரல் மாதத்திலிருந்து, 5 முதல் 7 சதவீதம் வரை, விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சில தயாரிப்பாளர்கள், ஒரு, ‘டிவி’க்கு, 2,000 – 3,000 ரூபாய் வரை, விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.கடந்த எட்டு மாதங்களில், எல்.இ.டி., பேனல்களின் விலை, ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வந்துள்ளது. அப்படி இதுவரை, 350 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.
ஒரு, ‘டிவி’யின் தயாரிப்பில், எல்.இ.டி., பேனலின் பங்கு மிக முக்கியமானது. ஒரு, ‘டிவி’யில், கிட்டத்தட்ட, 60 சதவீதம் பங்கை, இந்த பேனல் வகிக்கிறது. இதனால், விலை உயர்வு நிச்சயம் என்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|