பதிவு செய்த நாள்
11 மார்2021
23:22
புதுடில்லி:வர்த்தக வாகன தொழில், அடுத்த நிதியாண்டில், 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, ‘டாடா மோட்டார்ஸ்’ தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி ஏற்படும் என்றும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.டாடா மோட்டார்ஸ், அதன் நடுத்தர, இலகு ரக வர்த்தக வாகனமான, ‘அல்ட்ரா ஸ்லீக் டி சீரிஸ்’ வாகனங்களை, நேற்று அறிமுகம் செய்தது.
அப்போது, வர்த்தக வாகன தொழில் குறித்து, இப்பிரிவு வணிகத்தின் தலைவர், கிரிஷ் வாக் கூறியதாவது:நாட்டில், பொருளாதாரவளர்ச்சி அதிகரித்து வருவதை காண முடிகிறது. இதே நிலை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில், இரட்டை இலக்க வளர்ச்சியை, நாடு எட்டும் என, அரசும், ரிசர்வ் வங்கியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
வர்த்தக வாகன தொழில், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளுடன் இணைந்தது ஆகும். அடுத்த ஆண்டில், இப்பிரிவும் வளர்ச்சி காண்பதை நாம் பார்ப்போம். இரண்டு ஆண்டுகளாக சரிவில் இருந்த இந்த பிரிவில், இனி மீட்சியை காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|