பதிவு செய்த நாள்
13 மார்2021
21:12
புதுடில்லி:டாடா குழுமத்தை சேர்ந்த, ‘டைட்டன்’ நிறுவனம், ‘மான்ட்ப்ளாங்க்’ நிறுவனத்துடனான கூட்டு வணிகத்திலிருந்து, முற்றாக வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், டைட்டன் நிறுவனம், ஆடம்பர ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், மான்ட்ப்ளாங்க் உடன் கூட்டு வணிகத்தை துவங்கியது. ‘மான்ட்ப்ளாங்க் இந்தியா ரீட்டெய்ல்’ எனும் கூட்டு முயற்சியின் வாயிலாக, இந்தியாவில் ஆடம்பர ஆடைகளுக்கான வணிகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, அக்டோபர் 8ல், ஐந்து ஆண்டு கூட்டு முயற்சியிலிருந்து வெளியேற இருப்பதாக, டைட்டன் அறிவித்தது. இந்நிலையில், தற்போது, கூட்டு வணிகத்திலிருந்து முற்றாக வெளியேறி விட்டதாக, டைட்டன் தெரிவித்துள்ளது.
இது குறித்து, டைட்டன் நிறுவனம், ‘செபி’ உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு தெரிவித்து உள்ளதாவது:மான்ட்ப்ளாங்க் இந்தியா ரீட்டெய்ல் நிறுவனத்திலிருந்து, கடந்த, 12ம் தேதி முதல், முற்றாக, டைட்டன் நிறுவனம் வெளியேறிவிட்டது. இதனையடுத்து, இந்நிறுவனத்துடனான வணிக கூட்டு செயல்பாடுகள், 12ம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இதற்கு முன், டைட்டன் நிறுவனம், மான்ட்ப்ளாங்க் இந்தியா ரீட்டெய்ல் நிறுவனத்தில், 49 சதவீத பங்குகளைப் பெற்றிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|