நிதி குறித்த அறியாமை விலகட்டும்! நிதி குறித்த அறியாமை விலகட்டும்! ...  தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வைப்பு நிதி முதலீட்டில் தேவையான உத்தி என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2021
21:20

வைப்பு நிதி முதலீட்டை நாடும் சராசரி முதலீட்டாளர்கள், தற்போதைய சூழலில் குறுகிய கால அணுகுமுறையை பின்பற்றுவது ஏற்றதாக இருக்கும்.


பொது முடக்க பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், சராசரி முதலீட்டாளர்கள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் பழைய வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு பட வேண்டியிருக்கிறது என்றால், இன்னொரு பக்கம், வைப்பு நிதி உள்ளிட்ட நிரந்த வருமானத்திற்கான முதலீடுகள் தரும் பலன் குறைவாக உள்ளது.


அதிலும் பணவீக்கத்தின் பாதிப்பை கணக்கில் கொண்டால், வைப்பு நிதி அளிக்கும் பலன், மிக சொற்பமாக அமையும் நிலை உள்ளது. இதனால், வைப்பு நிதி முதலீட்டை பிரதானமாக நாடும் சராசரி முதலீட்டாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


பொருளாதார மீட்சி


இந்நிலையில், வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக, பொருளாதார மீட்சி தொடர்பான தகவல்கள் அமைகின்றன. வைப்பு நிதிகளை பொறுத்தவரை, வட்டி விகித போக்கில் மாற்றம் ஏற்படலாம் என்பதற்கான அறிகுறியாகவும் இது அமைகிறது.


அண்மை காலமாக, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், குறைந்த வட்டி விகித போக்கிற்கு ஆதரவாக அமைந்தன. மேலும், பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை யும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக, கடன்களுக்கான வட்டி குறைந்ததோடு, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதமும் குறைந்தது.


மேலும், வங்கிகளும் கடன் வழங்குவதில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றின. இதனால், கடன் தேவை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதால், வைப்பு நிதி வாயிலாக நிதி திரட்டும் தேவையும் குறைந்தது. கடந்த ஆண்டு நிலவிய இந்த சூழல் இந்த ஆண்டும் தொடரும் நிலை இருந்தாலும், வரும் மாதங்களில் நிலைமை மாறலாம் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.


பொருளாதார மீட்சி காரணமாக, வளர்ச்சி மேம்படும் நிலை உள்ளது. இது, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகித போக்கை மாற்றும் என எதிர்பார்க்கலாம்.


குறுகிய கால உத்தி


பொருளாதார வளர்ச்சி காரணமாக, கடன் தேவையும் அதிகரிக்கும் என்பதால், வங்கிகள் வைப்பு நிதி திரட்டுவதில் ஆர்வம் காட்டலாம். ரிசர்வ் வங்கி, இன்னும் சில காலத்திற்கு தற்போதைய அணுகுமுறையே பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.


எனினும், வரும் மாதங்களில் இது நிகழலாம். ஏனெனில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் வட்டி விகிதம் உயரலாம் என கருதப்படுகிறது.இப்போதே ஒரு சில வங்கிகள், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளன.


வரும் மாதங்களில் மேலும் பல வங்கிகள் இவ்வாறு செய்யலாம். இந்த சூழலில், சராசரி முதலீட்டாளர்கள், வைப்பு நிதி முதலீட்டை நாடும் போது, குறுகிய கால அளவை தேர்வு செய்யலாம்.


ஒரு ஆண்டு அல்லது 18 மாத அளவில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், வட்டி விகிதம் உயரும் சூழலில், வைப்பு நிதி முதிர்வு தொகையை விலக்கி, புதிய வட்டி விகிதத்தில் முதலீடு செய்யலாம். மேலும், வைப்பு நிதி முதலீட்டை மொத்தமாக செய்யாமல், படிப்படியாக மேற்கொள்ளும் உத்தியையும் பின்பற்றலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)