பதிவு செய்த நாள்
16 மார்2021
20:20
புதுடில்லி:ஏப்ரல் மாதத்திலிருந்து, எட்டு வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் காசோலை மற்றும் பாஸ்புக் ஆகியவை செல்லாததாகிவிடும்.
இந்த வங்கிகள், பெரிய வங்கி களுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரலிலிருந்து, புதிய காசோலை புத்தகங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.எனவே, இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்களுக்கான புதிய காசோலை புத்தகங்கள், பாஸ்புக் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளுமாறு, வங்கிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய காசோலை புத்தகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.1. தேனா பேங்க்2. விஜயா பேங்க்3. கார்ப்பரேஷன் பேங்க்4. ஆந்திரா பேங்க்5. சிண்டிகேட் பேங்க்6. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்7. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா8. அலகாபாத் பேங்க்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|