பதிவு செய்த நாள்
16 மார்2021
20:24
புதுடில்லி:வணிகங்களுக்காக வழங்கப்படும் கடன்களில், வாராக்கடன் அதிகரித்து, வங்கிகள் சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது, கல்விக் கடன் பிரிவிலும் வாராக் கடன் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதி வரையிலான காலத்தில், பொதுத்துறை வங்கிகளில், கல்விக் கடன் பிரிவில், வாராக்கடன், 9.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.மொத்தம், 3.66 லட்சம் பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், 8,587 கோடி ரூபாய் வாரக்கடனாக மாறி இருக்கிறது.கொரோனா தாக்கம் காரணமாக, வேலை வாய்ப்புகள் இல்லாதது, சம்பளம் குறைந்து போனது போன்ற காரணங்களால், கல்விக் கடன் பிரிவில் வாராக் கடன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்விக் கடனுக்கான வாராக்கடனை பொறுத்தவரை, தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து, கேரளா, பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியமாநிலங்கள் உள்ளன. வாராக்கடன்மாநிலம் கடன் தொகை (ரூ. கோடியில்)தமிழ்நாடு 3,490.75கேரளா 1,396.23பீகார் 908.16கர்நாடகா 495.69மகாராஷ்ட்ரா 448
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|