பதிவு செய்த நாள்
16 மார்2021
20:37
புதுடில்லி:‘ஹுருன் இந்தியா’ நிறுவனம், கடந்த, 2020ம் ஆண்டுக்கான, இந்தியாவின் செல்வ அறிக்கையைவெளியிட்டது. அதில், இந்தியாவில் குறைந்தபட்சம், 7 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, 4.12 லட்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த பிரிவில், டில்லி முதலிடத்தில் இருப்பதாகவும்; மும்பை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, 3,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியங்களின் அடிப்படையில், 70.3 சதவீத செல்வந்த குடும்பங்கள், 10 மாநிலங்களில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், அதிக செல்வந்தர்களை கொண்ட மாநிலமாக, மஹாராஷ்டிரா உள்ளது. இதையடுத்து, உத்தர பிரதேசமும், அதற்கு அடுத்த இடங்களில், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகியவையும் உள்ளன.
மஹாராஷ்டிராவில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை 56 ஆயிரம். உத்தர பிரதேசத்தில், 36 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில், 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.கர்நாடகாவில், 33 ஆயிரம் பேரும், குஜராத்தில், 29 ஆயிரம் செல்வந்தர்களும் உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர பிராண்டுகள் குறித்தும், தனியாக ஒரு பட்டியலை, ஹுருன் இந்தியா வெளியிட்டு உள்ளது.அதில், கார்களை பொறுத்தவரை, ‘மெர்சிடஸ் பென்ஸ்’ முதலிடத்திலும்; ‘பி.எம்.டபுள்யு.,’ இரண்டாவது இடத்திலும் உள்ளது. ‘லம்போர்ஹினி, மிகவும் விரும்பப்படும் ஆடம்பர ஸ்போர்ட்ஸ் காராக உள்ளது.‘ரோலக்ஸ்’ வாட்ச், இன்னும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தனியார் வங்கி களை பொறுத்தவரை, ‘எச்.டி.எப்.சி.,’ முதலிடத்திலும், ‘ஐ.சி.ஐ.சி.ஐ.,’ இரண்டாவது இடத்திலும் உள்ளன.
காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, செல்வந்தர்கள் மத்தியில், ‘எல்.ஐ.சி.,’ மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக இருக்கிறது. முதலீடுகளை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தைகள் விருப்பமான தேர்வாக இருக்கின்றன.இவ்வாறு ஹுருன் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|