ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ...  அரசின் நடவடிக்கையால் ‘பிட்காய்ன்’ மதிப்பு சரிவு அரசின் நடவடிக்கையால் ‘பிட்காய்ன்’ மதிப்பு சரிவு ...
குஜராத்தை விட தமிழகத்தில் செல்வந்தர்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2021
20:37

புதுடில்லி:‘ஹுருன் இந்தியா’ நிறுவனம், கடந்த, 2020ம் ஆண்டுக்கான, இந்தியாவின் செல்வ அறிக்கையைவெளியிட்டது. அதில், இந்தியாவில் குறைந்தபட்சம், 7 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, 4.12 லட்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த பிரிவில், டில்லி முதலிடத்தில் இருப்பதாகவும்; மும்பை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, 3,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியங்களின் அடிப்படையில், 70.3 சதவீத செல்வந்த குடும்பங்கள், 10 மாநிலங்களில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், அதிக செல்வந்தர்களை கொண்ட மாநிலமாக, மஹாராஷ்டிரா உள்ளது. இதையடுத்து, உத்தர பிரதேசமும், அதற்கு அடுத்த இடங்களில், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகியவையும் உள்ளன.

மஹாராஷ்டிராவில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை 56 ஆயிரம். உத்தர பிரதேசத்தில், 36 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில், 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.கர்நாடகாவில், 33 ஆயிரம் பேரும், குஜராத்தில், 29 ஆயிரம் செல்வந்தர்களும் உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர பிராண்டுகள் குறித்தும், தனியாக ஒரு பட்டியலை, ஹுருன் இந்தியா வெளியிட்டு உள்ளது.அதில், கார்களை பொறுத்தவரை, ‘மெர்சிடஸ் பென்ஸ்’ முதலிடத்திலும்; ‘பி.எம்.டபுள்யு.,’ இரண்டாவது இடத்திலும் உள்ளது. ‘லம்போர்ஹினி, மிகவும் விரும்பப்படும் ஆடம்பர ஸ்போர்ட்ஸ் காராக உள்ளது.‘ரோலக்ஸ்’ வாட்ச், இன்னும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தனியார் வங்கி களை பொறுத்தவரை, ‘எச்.டி.எப்.சி.,’ முதலிடத்திலும், ‘ஐ.சி.ஐ.சி.ஐ.,’ இரண்டாவது இடத்திலும் உள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, செல்வந்தர்கள் மத்தியில், ‘எல்.ஐ.சி.,’ மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக இருக்கிறது. முதலீடுகளை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தைகள் விருப்பமான தேர்வாக இருக்கின்றன.இவ்வாறு ஹுருன் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)