பதிவு செய்த நாள்
17 மார்2021
20:27
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்தில், 1 – 14 தேதி வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, 17 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 1.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 1 – 14ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இறக்குமதி, இக் கால கட்டத்தில், 27.77 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
ஏற்றுமதியை பொறுத்தவரை, பொறியியல் பொருட்கள், அரிசி, நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், தோல், எண்ணெய் வித்துகள், ஆயத்த ஆடைகள், ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவைக் கண்டிருக்கின்றது. இறக்குமதியை பொறுத்தவரை, தங்கம், மின்னணு பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவை அதிகளவில் இறக்குமதி ஆகியுள்ளன.கடந்த பிப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி, 0.67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|