பதிவு செய்த நாள்
17 மார்2021
20:30
புதுடில்லி:‘எக்ஸாரோ டைல்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 150- – 160 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுஇருக்கிறது.இதையடுத்து, 1.12 கோடி புதிய பங்குகளையும்; நிறுவனர்களின் ,22.38 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும்; நடைமுறை மூலதன தேவைகளுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இந்நிறுவனம், குஜராத்தை சேர்ந்த நிறுவனமாகும். இது, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களுக்கு தேவையான, ‘டைல்ஸ்’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்துக்கு நாடெங்கிலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர்.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|