பதிவு செய்த நாள்
17 மார்2021
20:33
புதுடில்லி:சீனாவின் மிகப் பெரும் பணக்காரரான, ஜாக் மாவுக்கு சொந்தமான, ‘அலிபாபா’ நிறுவனத்தை, ஊடக முதலீடுகளிலிருந்து வெளியேறுமாறு, சீன அரசு தெரிவித்திருப்பதாக, ‘வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
‘அலிபாபா ஹோல்டிங்’ நிறுவனத்தின் முதலீடுகள் குறித்த விசாரணையை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அரசு ஆரம்பித்து விட்டதாகவும், இதையடுத்தே, அலிபாபாவின் ஊடக முதலீட்டு பரவல் குறித்து முழுமையாக தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது.அலிபாபா ஹோல்டிங் நிறுவனம், பரந்துபட்ட அளவிலான முதலீடுகளை, ஊடகத் துறையில் மேற்கொண்டிருக்கிறது.
நிறுவனத்தின் முக்கிய வணிகம் ‘ஆன்லைன்’ வர்த்தகமாக இருந்த போதிலும், ஊடகங்களில் கணிசமாக முதலீடு செய்திருக்கிறது.‘டுவிட்டரை’ போன்ற, ‘வெய்போ’ என்ற சமூக ஊடக நிறுவனம், ஹாங்காங்கை சேர்ந்த, ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ உள்ளிட்ட பல நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க அளவிலான முதலீடுகளை அலிபாபா மேற்கொண்டிருக்கிறது.
இத்தகைய ஊடக செல்வாக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதனுடைய பிரசார இயந்திரங்களுக்கும் சவாலாக இருக்கும் என, சீன அரசு கருதுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஊடக முதலீடுகளிலிருந்து, அலிபாபாவை வெளியேற்ற விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|