பதிவு செய்த நாள்
17 மார்2021
20:41
புதுடில்லி:அனில் அகர்வால் தலைமையிலான, ‘வேதாந்தா ரிசோர்சஸ்’ நிறுவனம், இந்தியாவில் உள்ள அதன், ‘வேதாந்தா’ நிறுவனத்தின் பங்குகளின் விலையை அதிகரித்து, 235 ரூபாய்க்கு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில், வேதாந்தா நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை, ஒரு பங்கின் விலை, 160 ரூபாய் என வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது, ஒரு பங்கின் விலையை, 235 ரூபாயாக அதிகரித்து அறிவித்திருக்கிறது.
இந்த விலைக்கு அனைத்து பங்குகளும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் பட்சத்தில், இதற்காக, 15 ஆயிரத்து, 296 கோடி ரூபாயை நிறுவனம் செலவிட வேண்டியது இருக்கும்.வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை, மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய நிலவரப்படி 224.70 ரூபாயாக உள்ளது.
பங்குகளை திரும்ப வாங்கும் பட்சத்தில், வேதாந்தா நிறுவனத்தில், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் வசம் இருக்கும் பங்குகள் எண்ணிக்கை, 72.6 சதவீதமாக அதிகரிக்கும்.வரும் 23ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 7ம் தேதி வரையிலான காலத்தில், பங்குகளை வாங்க இருக்கிறது, வேதாந்தா ரிசோர்சஸ்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|