கடனுக்கு  'சிபில்' போல காப்பீட்டுக்கும் மதிப்பீடு கடனுக்கு 'சிபில்' போல காப்பீட்டுக்கும் மதிப்பீடு ... சீனாவில்  அலிபாபாவின்  நிறுவனத்துக்கு, அடி மேல் அடி சீனாவில் அலிபாபாவின் நிறுவனத்துக்கு, அடி மேல் அடி ...
மோசமான காலம் முடிந்துவிட்டது சக்திகாந்த தாஸ் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2021
21:19

புதுடில்லி:‘இந்திய பொருளாதாரத்தின் மோசமான காலம் முடிந்துவிட்டது. இனி, பொருளாதார வளர்ச்சி மேல் நோக்கி மட்டுமே செல்லும்’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது. அரசின் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. அரசின் தாராளமான மூலதன செலவுகள் காரணமாகவே, கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் விடுபட முடிந்தது.

இந்நிலையில், மீண்டும் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரிப்பு விரைவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு விடும் என ரிசர்வ்வங்கி கருதுகிறது.நாட்டின் சந்தையானது சீராக செயல்பட, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உதவும். மேலும், மத்திய – மாநில அரசுகளின் கடன் திட்டங்கள் சிரமம் ஏற்படுத்துவதாக இல்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும் உதவும்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.இருப்பினும், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பொறுத்த வரை, ரிசர்வ் வங்கிக்கு சில கவலைகள் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)