மோசமான காலம் முடிந்துவிட்டது சக்திகாந்த தாஸ் நம்பிக்கை மோசமான காலம் முடிந்துவிட்டது சக்திகாந்த தாஸ் நம்பிக்கை ... பியூச்­சர் – ரிலை­யன்ஸ் ஒப்­பந்­தம் நீதி­மன்­றம் தடை விதித்­தது பியூச்­சர் – ரிலை­யன்ஸ் ஒப்­பந்­தம் நீதி­மன்­றம் தடை விதித்­தது ...
சீனாவில் அலிபாபாவின் நிறுவனத்துக்கு, அடி மேல் அடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2021
21:25

புதுடில்லி:சீனாவை சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனத்துக்கு, அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது.

சீனாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான, அலிபாபா, பல்வேறு சிக்கல்களை அரசிடமிருந்து தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் ஊடக முதலீடுகளில் இருந்து நிறுவனத்தை வெளியேறச் சொன்னதன் தொடர்ச்சியாக, இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற இன்டர்நெட் தேடுபொறியான, ‘யு.சி., பிரவுசர்’ சீன ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

யு.சி., பிரவுசரை, 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சீன அரசு தொலைக்காட்சியின் நுகர்வோர் உரிமை நிகழ்ச்சியில், தகுதியற்ற நிறுவனங்களின் மருத்துவ விளம்பரங்களை உள்ளடக்கியதாக, யு.சி., பிரவுசர் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது. இதையடுத்து, அலிபாபா குழுமத்தின், யு.சி., பிரவுசர் நீக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நடவடிக்கையை அடுத்து, சீனாவின் பிரபலமான ஹூவாவேய், சயோமி, ‘விவோ’ உள்ளிட்ட நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து, யு.சி., பிரவுசரை பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆப்பிள் போன்களில் மட்டும் பழைய நிலை நீடிக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடுத்து, மன்னிப்பு கோரியுள்ள அலிபாபா, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பிரவுசரில் மேற்பார்வை முறையை வலுப்படுத்தி, பயனர்களுக்கு உயர்தர தகவல் சேவையை, கூடுதல் தரத்துடன் வழங்குவோம் என்றும், பயனர்கள் தொடர்ந்து கண்காணித்து அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)