பதிவு செய்த நாள்
19 மார்2021
20:01
புதுடில்லி:முன்னணி வங்கிகளின் வாடிக்கையாளர்கள், இணைய குற்றவாளிகளால் ஏமாற்றப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாக, ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
புதுடில்லியை சேர்ந்த, ‘சைபர்பீஸ் பவுண்டேஷன்’ நிறுவனம், இணைய பாதுகாப்பு சேவை நிறுவனமான, ‘ஆட்டோபோட் இன்போசெக்’ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட
ஆய்வின் முடிவில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னணி வங்கிகள், குறிப்பாக, எஸ்.பி.ஐ., – எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., – ஆக்சிஸ் பேங்க்,பஞ்சாப் நேஷனல் பேங்க்
ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் குறிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலும், வருமான வரியை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு குறுஞ்செய்திகளை அனுப்பி, இணைய குற்றவாளிகள் கைவரிசையை காட்டி விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி துறை மற்றும் வங்கிகள்
ஏற்கனவே இத்தகைய மோசடிகள் குறித்து, தொடர்ந்து வாடிக்கையாளர்களைஎச்சரித்து வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|