பதிவு செய்த நாள்
19 மார்2021
20:09
புதுடில்லி:பியூச்சர் ரீட்டெய்ல் – ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு தடை விதித்துள்ளது, டில்லி உயர் நீதிமன்றம்.
ரிலையன்ஸ் நிறுவனம், பியூச்சர் நிறுவனத்தின் சில வணிகங்களை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தது.இதற்கிடையே, பியூச்சர்
நிறுவனம், ஏற்கனவே தங்களுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக இது இருப்பதாக கூறி, அமேசான் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் தடை வாங்கியது.
இந்நிலையில், இந்தியாவில் இது குறித்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முடிவை உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும், பியூச்சர் நிறுவனத்துக்கு, 20 லட்சம் ரூபாய்
அபராதம் விதித்து, அந்த தொகை பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பியூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி மற்றும் சிலரை, ஏப்ரலில் நடைபெற இருக்கும் அடுத்த விசாரணையின்போது ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பியூச்சர் நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|