பதிவு செய்த நாள்
19 மார்2021
20:14
புதுடில்லி:பழைய வாகனங்களை, சாலை பயன்பாட்டிலிருந்து குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தை, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் கூட்டமைப்பான, ‘சியாம்’ வரவேற்று உள்ளது.அத்துடன், வாகன சோதனை மையங்கள் மற்றும் வாகன தகர்ப்பு மையங்கள் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை, நாடு முழுதும் உருவாக்க உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் நோக்கில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் அரசின் முயற்சி சரியான நடவடிக்கை ஆகும்.இந்நிலையில், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுதும் ஏற்படுத்துவதில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட, ‘சியாம்’ தயாராக இருக்கிறது.
நுகர்வோர்கள் தாமாக முன்வந்து, தங்களுடைய பழைய வாகனங்களை மற்றும் தகுதியற்ற வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்ற, இந்த விதிமுறைகள் எந்த அளவுக்கு உதவும் என்பதை அறிய நாங்கள் காத்திருக்கிறோம். இது குறித்து, நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|