பதிவு செய்த நாள்
19 மார்2021
20:15
புதுடில்லி:‘டிஜிட்டல் நாணயங்களை தடை செய்ய வேண்டாம்; அதிகபட்ச வரி வேண்டுமானால் விதித்துக் கொள்ளுங்கள்’ என, மத்திய அரசை, இத்தகைய நாணயங்களுக்கான சந்தைகள் கேட்டுக்கொண்டு உள்ளன.
மெய்நிகர் நாணய வர்த்தகங்களுக்கு தடை விதிக்கும் முடிவில் மத்திய அரசு இருக்கும் நிலையில், இந்நாணயங்களுக்கான பரிமாற்ற சந்தைகள் தரப்பில், சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.டிஜிட்டல் நாணயத்தை கட்டுப்படுத்துவதற்கும், வரிவிதிப்பதற்கும் தெளிவான விதிகளை அறிவிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், அரசு விரும்பும்பட்சத்தில், அதிகபட்ச வரி வரம்புக்குள் கொண்டுவருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும்; ஆனால், தடை விதித்து விடக்கூடாது என்றும் கேட்டுகொண்டிருக்கின்றன. டிஜிட்டல் நாணய முதலீட்டின் மூலமான முதலீட்டாளரின் வருமானத்துக்கு, 35 சதவீதம் அளவுக்கு வரி விதித்துக் கொள்ளலாம் என்றும், தங்களால், 28 சதவீத ஜி.எஸ்.டி., வழங்க முடியும் என்றும் சந்தைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், ‘பிட்காய்ன்’ போன்ற டிஜிட்டல் நாணயங்கள் குறித்த கவலை, ரிசர்வ் வங்கிக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன சந்தைகள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|