பியூச்­சர் – ரிலை­யன்ஸ் ஒப்­பந்­தம் நீதி­மன்­றம் தடை விதித்­ததுபியூச்­சர் – ரிலை­யன்ஸ் ஒப்­பந்­தம் நீதி­மன்­றம் தடை விதித்­தது ...  பாலிசிதாரர்களுக்கு தடுப்பூசி காப்பீட்டு ஆணையம் உத்தரவு பாலிசிதாரர்களுக்கு தடுப்பூசி காப்பீட்டு ஆணையம் உத்தரவு ...
அதிக வரி கட்ட தயார் டிஜிட்டல் நாணய சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2021
20:15

புதுடில்லி:‘டிஜிட்டல் நாணயங்களை தடை செய்ய வேண்டாம்; அதிகபட்ச வரி வேண்டுமானால் விதித்துக் கொள்ளுங்கள்’ என, மத்திய அரசை, இத்தகைய நாணயங்களுக்கான சந்தைகள் கேட்டுக்கொண்டு உள்ளன.

மெய்நிகர் நாணய வர்த்தகங்களுக்கு தடை விதிக்கும் முடிவில் மத்திய அரசு இருக்கும் நிலையில், இந்நாணயங்களுக்கான பரிமாற்ற சந்தைகள் தரப்பில், சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.டிஜிட்டல் நாணயத்தை கட்டுப்படுத்துவதற்கும், வரிவிதிப்பதற்கும் தெளிவான விதிகளை அறிவிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், அரசு விரும்பும்பட்சத்தில், அதிகபட்ச வரி வரம்புக்குள் கொண்டுவருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும்; ஆனால், தடை விதித்து விடக்கூடாது என்றும் கேட்டுகொண்டிருக்கின்றன. டிஜிட்டல் நாணய முதலீட்டின் மூலமான முதலீட்டாளரின் வருமானத்துக்கு, 35 சதவீதம் அளவுக்கு வரி விதித்துக் கொள்ளலாம் என்றும், தங்களால், 28 சதவீத ஜி.எஸ்.டி., வழங்க முடியும் என்றும் சந்தைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், ‘பிட்காய்ன்’ போன்ற டிஜிட்டல் நாணயங்கள் குறித்த கவலை, ரிசர்வ் வங்கிக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன சந்தைகள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)