பதிவு செய்த நாள்
19 மார்2021
20:21
புதுடில்லி:சமீபகாலமாக, இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதை அடுத்து, அதிக நிறுவனங்கள், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
அந்த வகையில், ‘அதானி வில்மார்’ நிறுவனமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்து திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், 5 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த, அதானி வில்மார், சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த, வில்மார் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும்பட்சத்தில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வரிசையில் ஏழாவதாக இருக்கும்.பங்கு வெளியீடு சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திரட்டப்படும் தொகை உள்ளிட்ட விஷயங்கள் நெருக்கத்தில் மாற்றம் காணலாம் என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.அதானி வில்மார் நிறுவனத்துக்கு, 40 ஆலைகள் உள்ளன.
இவற்றின் மூலம், 16 ஆயிரத்து, 800 டன் எண்ணெயை சுத்திகரிக்க முடியும். 6 ஆயிரம் டன் விதைகளை அரைக்க முடியும். 12 ஆயிரத்து, 900 டன் பொருட்களை பேக்கேஜ் செய்ய முடியும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|