பதிவு செய்த நாள்
19 மார்2021
20:24
மும்பை:நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ.,யின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தற்போது, 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக, வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியுளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வங்கியின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தற்போது, 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கொரோனா காலத்தில், ‘ஆன்லைன்’ வர்த்தகம் அதிகரித்ததே, இந்த அளவுக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர காரணமாக அமைந்தது.
மேலும், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி., ஆகிய முறைகளில் பணம் செலுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டதும், டிஜிட்டல் பரிவர்த்தனை உயர உதவிகரமாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், வங்கியின், ‘யோனோ’ செயலி, மிகப் பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, 3.50 கோடி வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.
வங்கி, நாள் ஒன்றுக்கு, 35 – 40 ஆயிரம் சேமிப்புக் கணக்குகளை, மொபைல் செயலி துணையுடன் துவங்கி வருகிறது. மேலும், அனைத்து வகையான டிஜிட்டல் செயல்பாடு களுக்கும் ஏற்ப, உள்கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|