பதிவு செய்த நாள்
20 மார்2021
21:43
புதுடில்லி:‘டெஸ்லா’ நிறுவன கார்கள், சீனாவிலோ அல்லது வேறு எங்கிலுமோ, உளவு பார்க்க பயன்படுகிறது என்றால், நிறுவனம் இழுத்து மூடப்பட்டுவிடும் என, டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
அண்மையில், சீன ராணுவம், டெஸ்லா கார்களை அதன் வளாகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. டெஸ்லா கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள், பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, எலான் மஸ்க்கிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார் சந்தையும், மின்சார வாகனங்களுக்கான முக்கியமான நாடாகவும் இருக்கும் சீனாவில், டெஸ்லா நிறுவனம், கடந்த ஆண்டு, 1.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டில், உள்நாட்டு போட்டி நிறுவனங்களான, ‘நியோ, ஜீலி ’உள்ளிட்டவற்றால், அதிக சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது டெஸ்லா.
இந்நிலையில், சீன ராணுவத்தின் தடை, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காணொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எலான் மஸ்க்கிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|