பதிவு செய்த நாள்
20 மார்2021
21:45
புதுடில்லி:காப்பீட்டு நிறுவனங்கள், அதன் பாலிசிதாரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள உதவவேண்டும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ அறிவுறுத்தி உள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள், தடுப்பூசி போடும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பாலிசிதாரர்களிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொது மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில், இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது குறித்து, ஆணையம் கடந்த, 3ம் தேதியே அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது.பாலிசிதாரர்கள், குழுவாகவோ அல்லது தனிநபர்களாகவோ, பொது மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள, காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் படி ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதலில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல்கள் மூலமாக பாலிசிதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அடுத்தகட்டமாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. அடுத்து, 28 நாட்களுக்கு பிறகான, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும் தவறாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|