பதிவு செய்த நாள்
20 மார்2021
21:48
புதுடில்லி:‘டி.சி.எஸ்.,’ எனும், ‘டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இத்தகைய ஊதிய உயர்வு அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடும் முதல், ஐ.டி., நிறுவனம் இதுவாகும்.
நிறுவனத்தின், 4.7 லட்சம் ஊழியர்கள், இந்த ஊதிய உயர்வால் பலனடைவார்கள். 6 முதல், 7 சதவீதம் வரை, ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆறு மாதங்களுக்குள், இது, இரண்டாவது ஊதிய உயர்வாகும். தற்போதைய அறிவிப்பையும் சேர்த்தால், இந்த ஆறு மாத காலத்தில், ஊழியர்கள் ஊதியம், 12 – 14 சதவீதம் வரை அதிகரிக்கும்.
இது குறித்து, டி.சி.எஸ்., தரப்பில் தெரிவித்து உள்ளதாவது:கடினமான காலங்களில் நிறுவனத்தை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். இந்த ஊதிய உயர்வு, அவர்கள் மீதான எங்கள் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் அறிவிப்பு, வழக்கமான ஊதிய உயர்வுகள் வழங்கும் நிலைக்கு நிறுவனங்கள் சென்றுவிட்டதையே காட்டுவதாக உள்ளது என்கிறார்கள், இத்துறை சார்ந்த நிபுணர்கள்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|