பதிவு செய்த நாள்
20 மார்2021
21:54
புதுடில்லி:நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகளை, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக முன்னெடுக்க முடியாது. அரசியல் தலைவர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களும் ஒன்றிணைந்து, செயல்பட வேண்டும். அப்போது தான், முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும் என, ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:கார்ப்பரேட் தலைவர்களுடன் பணியாற்றுவதில், மஹாத்மா காந்தி உட்பட, இந்தியாவின் அரசியல் தலைவர்களுக்கு எந்தவிதமான மாறுபட்ட அபிப்பிராயமும் கிடையாது. அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது.கொரோனா தொற்று நோயின் பெரும் பாதிப்பு களை சமாளித்து, அதை தக்கவைத்துக் கொள்ள, இந்திய பொருளாதார வளர்ச்சி 10.5 – 11 சதவீதமாக உயர வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டு இருக்கிறது.தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருகிறது.அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி 10.5 – 11 சதவீதமாக உயர வேண்டும். கடந்த ஆண்டில் நாம் தயாராகாத நிலையில் தொற்றுநோய் தாக்கியது. அடுத்து வரும் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|