பதிவு செய்த நாள்
23 மார்2021
20:48
சென்னை:நிதியாண்டு இறுதி என்பதால், ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி பலன்களை பயன் படுத்திக் கொள்ளலாம் என, மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் வரியை ரொக்கமாக செலுத்த வேண்டும் என்ற தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பு, 2020- – 21ம் நிதியாண்டு, வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தங்களது வருவாய் இலக்கை அடைய, வணிகர்கள் செலுத்த வேண்டிய வரியை, ரொக்கமாக செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன.ஜி.எஸ்.டி., நடைமுறையில், உள் நாட்டில் வரி செலுத்தி மூலப்பொருட்கள் பெற்று, உற்பத்தி செய்த பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் செலுத்திய வரி, உள்ளீட்டு வரியாக திரும்ப வழங்கப்படுகிறது.
இந்நிலையில், செலுத்த வேண்டிய வரி நிலுவையில், தங்களின் உள்ளீட்டு வரி பலன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என, மத்திய மறைமுக வரி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் வரியை ரொக்கமாக செலுத்த எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. இவ்வாறு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|