பதிவு செய்த நாள்
23 மார்2021
20:53
புதுடில்லி:கொரோனா காலத்தில், நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி, பின்னடைவுகளை சந்தித்தது ஒருபுறம் இருக்க, இதே காலகட்டத்தில், ஏராளமான புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட, 1.38 லட்சம் புதிய நிறுவனங்கள் கொரோனா காலத்தில் துவக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் இது குறித்து கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் அதிகரித்திருந்த காலகட்டத்தில், ஏராளமான புதிய நிறுவனங்கள் இந்தியாவில் துவக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நடப்பு ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட, 1.38 லட்சம் புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இக்காலகட்டத்தில், 2013ம் ஆண்டு நிறுவன சட்டம், பிரிவு 248ன் கீழ், மொத்தம், 10 ஆயிரத்து, 113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|