‘பிட்காயினில் முதலீடு செய்ய மக்களை அனுமதிக்க வேண்டும்’ ‘பிட்காயினில் முதலீடு செய்ய மக்களை அனுமதிக்க வேண்டும்’ ...  வேலையில்லா திண்டாட்டம் குறைகிறது: ஓராண்டுக்கு முந்தைய நிலை திரும்புகிறது வேலையில்லா திண்டாட்டம் குறைகிறது: ஓராண்டுக்கு முந்தைய நிலை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் விலை அதிகரிக்க மாருதி சுசூகி முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2021
21:04

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் அனைத்து ரக வாகனங்களின் விலையை, ஏப்ரலில் இருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் பாதிப்பை சமாளிக்கும் விதத்தில், அனைத்து வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்த இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:

மத்திய அரசு, புதிய மாசு உமிழ்வு விதிமுறையை கொண்டு வந்ததன் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே நிறைய செலவுகள் இருந்தன. அப்போதே விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தோம். ஆனால், கடந்த ஆண்டு சந்தை நிலைமை சரியில்லாமல் போய்விட்டது. எனவே, அந்த சமயத்தில் நாங்கள் விலையை அதிகரிக்கவில்லை.ஆனால், இப்போது உள்ளீட்டு பொருட்கள் விலை மிகக் கடுமையாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக, மூலப் பொருட்களான உருக்கு, பிளாஸ்டிக் போன்றவற்றின் விலை அதிகரித்துவிட்டது.

கொரோனாவுக்கு பின், நாங்கள் தேவையை அதிகரிக்க முயற்சித்தோம். அதனால், ஜனவரி மாதத்தில் சிறிய அளவில் விலையை அதிகரித்தோம். உள்ளீட்டு விலை குறைந்துவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், இப்போதைய கணிப்புகள் அடுத்த சில காலாண்டுகளுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றன. எனவே, மிகுந்த தயக்கத்துடன் தான் ஏப்ரல் முதல் விலை உயர்வை அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)