பதிவு செய்த நாள்
23 மார்2021
21:04
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் அனைத்து ரக வாகனங்களின் விலையை, ஏப்ரலில் இருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் பாதிப்பை சமாளிக்கும் விதத்தில், அனைத்து வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்த இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:
மத்திய அரசு, புதிய மாசு உமிழ்வு விதிமுறையை கொண்டு வந்ததன் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே நிறைய செலவுகள் இருந்தன. அப்போதே விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தோம். ஆனால், கடந்த ஆண்டு சந்தை நிலைமை சரியில்லாமல் போய்விட்டது. எனவே, அந்த சமயத்தில் நாங்கள் விலையை அதிகரிக்கவில்லை.ஆனால், இப்போது உள்ளீட்டு பொருட்கள் விலை மிகக் கடுமையாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக, மூலப் பொருட்களான உருக்கு, பிளாஸ்டிக் போன்றவற்றின் விலை அதிகரித்துவிட்டது.
கொரோனாவுக்கு பின், நாங்கள் தேவையை அதிகரிக்க முயற்சித்தோம். அதனால், ஜனவரி மாதத்தில் சிறிய அளவில் விலையை அதிகரித்தோம். உள்ளீட்டு விலை குறைந்துவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், இப்போதைய கணிப்புகள் அடுத்த சில காலாண்டுகளுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றன. எனவே, மிகுந்த தயக்கத்துடன் தான் ஏப்ரல் முதல் விலை உயர்வை அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|