பதிவு செய்த நாள்
24 மார்2021
19:19
மும்பை:அனுபம் ரசாயன் இந்தியா நிறுவனத்தின் பங்குகள், நேற்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட போது, 6 சதவீத விலை சரிவை சந்தித்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
சமீபகாலமாக, புதிய பங்கு வெளியீடுகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, சிறப்பு வகை ரசாயனங்களை தயாரிக்கும், அனுபம் ரசாயன் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கும் வரவேற்பு காணப்பட்டது. ஒரு பங்கின் அதிகப்பட்ச விலை, 555 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பங்குகள் வேண்டி, 44 மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. அதனால், பங்குகள்,பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது, மேலும் விலை உயரும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கு, வெளியீட்டு விலையை விட, 3.65 சதவீதம் குறைந்து, 534.70 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. வர்த்தகத்தின் இடையே பங்கு விலை, 501.15 ரூபாயாக சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில், 518.15 ரூபாயில் நிலை கொண்டது.தேசிய பங்குச் சந்தையிலும், பங்கு விலை, 6.30 சதவீதம் குறைந்து, 520 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு, இறுதியில், 518 ரூபாயில் நிலை பெற்றது.
இது, இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்படும் அன்று, நல்ல விலைக்கு விற்று லாபமீட்ட முயன்ற முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|