பதிவு செய்த நாள்
24 மார்2021
19:21
புதுடில்லி:வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் கரன்சிகளுக்கு, ‘டெஸ்லா’ மின்சார கார் விற்பனை செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வலைதளங்களில் பொருட்கள் வாங்க, ‘பிட்காய்ன், எதிரியம்’ போன்ற மெய்நிகர் கரன்சிகள் பயன்படுகின்றன. அத்துடன், பங்குச் சந்தைகள் போல, மெய்நிகர் கரன்சி சந்தையில் இத்தகைய கரன்சிகள் மீது வர்த்தகம் நடைபெறுகிறது. ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த கரன்சிகளை அங்கீகரித்துள்ளன. இந்தியாவில், பிட்காய்ன் போன்ற மெய்நிகர் கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கவில்லை.
இந்நிலையில், மின்சார கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள, டெஸ்லா நிறுவனம், பிட்காய்ன் போன்ற மெய்நிகர் கரன்சிகளுக்கு கார் விற்பனை செய்யப்படும் என, அறிவித்து உள்ளது.இந்நிறுவனத்தின் தலைவர், எலன் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், டெஸ்லா கார் விற்பனை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|