பதிவு செய்த நாள்
25 மார்2021
20:36
புதுடில்லி:ஏப்ரல் மாதத்திலிருந்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள், வாகனங்களுக்கான விலை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, இரு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரிக்க உள்ளது.
ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டிருக்க, இந்த ஆண்டில், இரண்டாவது முறையாக, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலையும் அதிகரிக்க உள்ளது.அண்மையில், ‘மாருதி சுசூகி’ உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பதால், நடப்பு ஆண்டில், இரண்டாவது முறையாக விலை ஏற்றத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.
உலோகங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்கான விலை அதிகரித்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, இருசக்கர வாகன தயாரிப்பாளர்களும் வாகனங்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹீரோ மோட்டோ கார்ப் விலையை அதிகரிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|