அன்னிய நிறுவனங்களுக்கு ‘டிஜிட்டல்’ சேவை வரி ரத்து அன்னிய நிறுவனங்களுக்கு ‘டிஜிட்டல்’ சேவை வரி ரத்து ...  சைரஸ் மிஸ்திரி வழக்கில் ரத்தன் டாடாவுக்கு வெற்றி சைரஸ் மிஸ்திரி வழக்கில் ரத்தன் டாடாவுக்கு வெற்றி ...
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி? தினமலர் வழங்கும் மெகா 'வெபினார்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2021
20:41

சென்னை:மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை வாசகர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்துடன் இணைந்து, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, ‘தினமலர்’ நடத்த உள்ளது. முதல் நிகழ்ச்சி, வரும், 27ம் தேதி அன்று, ‘வெபினார்’ வாயிலாக நடைபெற உள்ளது.

முற்றிலும் இலவசமான நிகழ்ச்சி இது. காலை, 11 மணி முதல், மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மொத்தம், 10 பகுதிகளாக நடைபெற இருக்கின்றன. வரும், 27ம் தேதியன்று நடைபெற இருக்கும் முதல் நிகழ்ச்சியில், ‘மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி; என்னென்ன நன்மைகள்’ என்பது குறித்து விளக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே மாணவர்களுக்காக, ‘ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும்’ என பல நிகழ்ச்சிகளை தனித்துவத்துடன், ‘தினமலர்’ நடத்தி வருவதை நாடே அறியும். அதன் தொடர்ச்சியாக, மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்த நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.

முதலீட்டு சூட்சுமங்கள்

மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து ஆரம்ப நிலையில் துவங்கி, அதன் அனைத்து சூட்சுமங்களையும் விளக்கி சொல்லும் வகையில், இந்த நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெற இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் சார்பாக, அதன் தெற்கு மண்டல தலைவர் எஸ்.ஹரீஷ் , மற்றும் பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் பங்கேற்று, மியூச்சுவல் பண்டு குறித்த அனைத்து விஷயங்களையும் வாசகர்களுக்கு விளக்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியை, பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் நெறியாளராக இருந்து நடத்த இருக்கிறார்.அத்துடன், வாசகர்களின் சந்தேகங்களையும் நிகழ்ச்சியின்போது நிபுணர்கள் தீர்த்துவைக்க இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன் படுத்தி, வாசகர்கள் மியூச்சுவல் பண்டு குறித்த தங்களின் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதற்காக, வாசகர்கள், www.dinamalar.com/webinar எனும் இணையதளத்திற்கு சென்று தங்கள் சந்தேகங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

கஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது; அதை சேமிக்கவும் வேண்டும். சேமித்தால் மட்டும் போதாது; அதை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு மட்டும் செய்தால் போதாது; அது பல மடங்காக பெருக வேண்டும்.உங்கள் சேமிப்பை, முதலீடாக மாற்றி, அதை பல மடங்காக அதிகரிக்க உதவும் இந்த வாய்ப்பை, தவற விட்டு விடாதீர்கள். மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்து, ஆதியிலிருந்து அந்தம் வரை அறிந்து கொள்ளுங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)