பதிவு செய்த நாள்
25 மார்2021
20:43
புதுடில்லி:நாட்டின் நிதிதொழில்நுட்ப சந்தை, 2025ம் ஆண்டில், 6.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக உயரும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும், நடப்பு ஆண்டுக்கான, இந்திய பொருளாதார மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர், இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: நிதிதொழில்நுட்ப துறையை பொறுத்தவரை, கட்டுப்பாடுகள் அதன் புதுமைகளுக்கு உதவுவதாக இருக்குமே தவிர, அதன் குரல்வளையை நெரிப்பதாக இருக்காது.கடந்த கொரோனா காலத்தில், கிட்டத்தட்ட, 274 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று, மக்கள் பயனடைந்துள்ளனர்.
ஆர்.டி.ஜி.எஸ்., மற்றும் என்.இ.எப்.டி., ஆகிய முறைகளில் தற்போது, 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அத்துடன், சமீபத்தில், வெளிநாட்டு பணத்தையும் பரிவர்த்தனை செய்யலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால், நம் நாட்டையும் தாண்டி, விரிவாக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி, தன் கொள்கைகளின் மூலம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் முனைப்பு காட்டி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை நாட்டின் பொருளாதார மீட்சியை பாதிக்காது. பத்திர சந்தைகள் குறித்து அரசாங்கத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே எந்த சச்சரவுகளும் இல்லை.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆன்லைன் நாணயங்கள் குறித்து, அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருப்பதாக கருதவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|