மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி? தினமலர் வழங்கும் மெகா 'வெபினார்' மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி? தினமலர் வழங்கும் மெகா ... ...  சைரஸ் மிஸ்திரி வழக்கில் ரத்தன் டாடாவுக்கு வெற்றி சைரஸ் மிஸ்திரி வழக்கில் ரத்தன் டாடாவுக்கு வெற்றி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
'அரசுடன் ரிசர்வ் வங்கிக்கு கருத்து வேறுபாடு இல்லை'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2021
20:43

புதுடில்லி:நாட்டின் நிதிதொழில்நுட்ப சந்தை, 2025ம் ஆண்டில், 6.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக உயரும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும், நடப்பு ஆண்டுக்கான, இந்திய பொருளாதார மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர், இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: நிதிதொழில்நுட்ப துறையை பொறுத்தவரை, கட்டுப்பாடுகள் அதன் புதுமைகளுக்கு உதவுவதாக இருக்குமே தவிர, அதன் குரல்வளையை நெரிப்பதாக இருக்காது.கடந்த கொரோனா காலத்தில், கிட்டத்தட்ட, 274 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று, மக்கள் பயனடைந்துள்ளனர்.

ஆர்.டி.ஜி.எஸ்., மற்றும் என்.இ.எப்.டி., ஆகிய முறைகளில் தற்போது, 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அத்துடன், சமீபத்தில், வெளிநாட்டு பணத்தையும் பரிவர்த்தனை செய்யலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால், நம் நாட்டையும் தாண்டி, விரிவாக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி, தன் கொள்கைகளின் மூலம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் முனைப்பு காட்டி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை நாட்டின் பொருளாதார மீட்சியை பாதிக்காது. பத்திர சந்தைகள் குறித்து அரசாங்கத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே எந்த சச்சரவுகளும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆன்லைன் நாணயங்கள் குறித்து, அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருப்பதாக கருதவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)