பதிவு செய்த நாள்
26 மார்2021
20:58
புதுடில்லி:‘ராஜஸ்தானில் எண்ணெய் துரப்பண வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தில், 10 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்’ என, வேதாந்தா குழுமத்திற்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில், பார்மர் எண்ணெய் வளப் பகுதியை, வேதாந்தா குழுமம், 25 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. கடந்த ஆண்டு குத்தகை காலம் முடிந்ததை அடுத்து, குத்தகையை புதுப்பிக்குமாறு, மத்திய அரசிடம் கோரியது. அப்போது, ‘லாபத்தில், 10 சதவீதம் தொகை தந்தால், குத்தகை புதுப்பிக்கப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து, வேதாந்தா குழுமம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘25 ஆண்டுகளுக்கு முன் நிபந்தனையின்றி போடப்பட்ட ஒப்பந்தத்தை, அதேபோல தற்போது புதுப்பிக்குமாறு, வேதாந்தா கோர முடியாது.‘ஒப்பந்தத்தை புதுப்பிக்க, அரசு விதித்த நிபந்தனை ஏற்கத்தக்கது. வே தாந்தா, 2030ம் ஆண்டு வரையிலான குத்தகை கா லத்தில் ஈட்டும் லாபத்தில், 10 சதவீதத்தை, மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்’ என, அமர்வு தீர்ப்பளித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|