பதிவு செய்த நாள்
27 மார்2021
20:15
புதுடில்லி:‘‘எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,’’ என, தேசிய பொருளாதார ஆலோசகர், கே.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:வரும், 2021 – 22ம் நிதியாண்டில், இரு பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பதன் மூலம், 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா பிரச்னையால், இலக்கை எட்ட இயலவில்லை. வரும் நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எல்.ஐ.சி., நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, எல்.ஐ.சி.,யில் மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்கு விற்பனை மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்கம் மற்றும் நிதிச் சந்தை ஏற்ற இறக்கத்தை நல்ல முறையில் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|