பி.எப்.,: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! பி.எப்.,: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ... கொரோனா காப்பீடு பாலிசிகள் நீட்டிப்பு கொரோனா காப்பீடு பாலிசிகள் நீட்டிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஓராண்டு பொது­மு­டக்­கம் கற்­றுத்­த­ரும் நிதி பாடங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2021
22:32

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் அமல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த புதிய சூழல் கற்றுத்தந்த நிதி பாடங்களை நினைவில் கொள்வோம்.

பொது­மு­டக்­கம் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பில் இருந்து, பொரு­ளா­தா­ரம் மெல்ல மீண்டு வந்து கொண்­டி­ருக்­கும் நிலை­யில், கொரோனா இரண்­டாம் பாதிப்பு தொடர்­பான செய்­தி­கள்
எச்­ச­ரிக்­கை­யாக அமை­கின்­றன. கொரோனா உண்­டாக்­கிய புதிய இயல்பு நிலை, பொரு­ளா­தா­ரத்தை பாதித்­த­தோடு, தனி­ந­பர்­க­ளின் நலத்­தை­யும் பாதித்­தது. பணி­யி­ழப்பு மற்­றும் ஊதிய குறைப்பு உள்­ளிட்­ட­ வற்றை எதிர்­கொள்ள, வாழ்­வி­யல் மாற்­றங்­கள் தேவைப்­பட்­டன. எனி­னும், இந்த சூழல், முக்­கிய நிதி பாடங்­க­ளை­யும் கற்­றுத் ­தந்­துள்­ளது.

அவ­சர கால நிதி

எதிர்­பா­ராத நெருக்­க­டியை சமாளிக்க, குறைந்­த­பட்­சம் ஆறு மாத கால அடிப்­படை செல­வு­க­ளுக்­கான தொகை, அவ­சர கால நிதி­யாக கையி­ருப்­பில் இருக்க வேண்­டும் என சொல்­லப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை, பொது­மு­டக்­கம் தெளி­வாக புரிய வைத்­தது.


இத்­த­கைய நிதியை உரு­வாக்கி கொள்­வது முக்­கி­யம் என்­ப­தோடு, இந்த நிதி, ஓராண்­டுக்­கான அடிப்­படை செலவை சமா­ளிக்க கூடிய அள­வாக இருக்­கும் வகை­யில் அமை­வ­தும் நல்­லது.
மேலும், கடந்த ஆண்டு நெருக்­க­டிக்கு மத்­தி­யில் கைவ­சம் இருந்த அவ­சர கால நிதியை பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­வர்­கள், அதை மீண்டும் உரு­வாக்கி கொள்­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

அவ­சர கால நிதியை தேவைப்­படும்போது உட­ன­டி­யாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யில், பொருத்­த மான வழி­களில் முத­லீடு செய்ய வேண்­டும். அவ­சர கால நிதி போலவே, மருத்­துவ காப்­பீட்­டின் அவ­சி­யத்­தை­யும் புதிய இயல்பு நிலை புரிய வைத்­தது. மருத்­துவ காப்­பீடு
பெறு­வது மட்­டும் போதாது, காப்­பீடு தொகை அதி­க­மாக இருப்­ப­தும் அவ­சி­யம் என்­ப­தும் புரிய வந்­துள்­ளது.


அதி­க­ரித்து வரும் மருத்­துவ செல­வு­களை கருத்­தில் கொண்டு, மருத்­துவ காப்­பீடு தொகை­யும் போது­மா­ன­தாக இருப்­பதை உறுதி செய்து கொள்­வது அவ­சி­யம். அலு­வ­லக தரப்­பில் குழு காப்­பீடு அளிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், தனியே காப்­பீடு பெற்­றி­ருப்­பது அவ­சி­யம் என்­ப­தை­யும் உணர வேண்­டும்.

வட்டி குறைப்பு

பொரு­ளா­தார சிக்­க­லுக்கு நடுவே, பல­ரும் கடன் தவ­ணை­களை சமா­ளிப்­பதை கடி­ன­மாக உணர்ந்­த­னர். வீட்­டுக்­க­டன் பெற்­றி­ருந்­த­வர்­கள், மாதத்­த­வ­ணையை விடா­மல் தொட­ரும் சவாலை எதிர்­கொண்­ட­னர். இதற்கு தற்­கா­லிக நிவா­ர­ண­மும் அளிக்­கப்­பட்­டது. கடன் தவ­ணை நெருக்­க­டியை எதிர்­கொண்­ட­வர்­கள், வரும் காலத்­தில் கடன் நிர்­வா­கத்­தில் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும். வீட்­டுக்­ க­ட­னுக்­கான வட்டி விகி­தம் தற்­போது மிக­வும் குறை­வாக
உள்­ளது.


ஏற்­க­னவே கடன் பெற்­ற­வர்­கள் அதிக வட்டி விகி­தம் செலுத்தி வந்­தால், குறைந்த கடன்
விகி­தத்­திற்கு மாறு­வது மாதத்­ த­வ­ணையை குறைக்க உத­வுமா என பரி­சீ­லிக்க வேண்­டும்.சவா­லான சூழ­லில், பல­ரும் செல­வு­களை சமா­ளிக்க, கைவ­சம் உள்ள முத­லீ­டு­களில் இருந்து பணம் எடுத்­தி­ருக்­க­லாம். எனி­னும், நின்று போன முத­லீ­டு­களை தொடர்­வது முக்­கி­யம். விலக்­கப்­பட்ட முத­லீட்டை ஈடு செய்­வ­தி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும்.


வாழ்­வி­யல் செல­வு­களை குறைத்­துக்­கொள்ள முடிந்­தி­ருக்­கும் சூழலை பயன்­ப­டுத்­திக்­கொண்டு, மிச்­ச­மா­கும் தொகையை, உரிய வகை­யில் முத­லீடு செய்ய வேண்­டும். ஓய்வு காலத்­திற்­கான சேமிப்பை சீராக்­கு­வ­தி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)