பதிவு செய்த நாள்
29 மார்2021
14:31
புதுடில்லி : 235+ நகரங்களில் 325+ அவுட்லெட்களுடன் மிக வேகமாக வளரும் ஆட்டோமொபைல் வலைப்பணிகளுள் ஒன்றாக மாருதி சுசூகியின் வர்த்தக வாகனங்கள் உருவெடுத்துள்ளது. மாருதி சுசூகியின் விரிவான சேவை வலைப்பணி மற்றும் விற்பனைக்குப் பின் தடையற்ற சேவைக்கான உறுதிமொழி ஆகியவற்றுடன் சமீபத்தில் 92,000+ விற்பனை என்னும் மைல்கல் சாதனையைக் கடந்துள்ளது.
இந்த சேனல் கேஸோலின் மற்றும் பேக்ட்ரி ஃபிட்டெட் எஸ்-சிஎன்ஜி ஆகிய இரு எரிபொருள் வாய்ப்புகளுடன் பல்வகையான வாகனங்களை வழங்குகிறது. வாங்கும் செலவு குறைவு, எரிபொருள் சிக்கனம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு ஆகிய மூன்று அனுகூலமான அம்சங்களை மாருதி சுசூகி வர்த்தக வாகனங்கள் தருகின்றன.
சரக்கு எடுத்துச் செல்லும் வணிகங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்யேக வர்த்தக வாகனங்களின் வரிவான ரகங்களைக் மாருதி சுசூகி கமர்ஷியல் கொண்டுள்ளது. சூப்பர் கேரி மற்றும் ஈகோ கார்கோ உள்ளிட்ட ஆற்றல் மிகு சரக்கு வாகனங்கள், ஆல்டோ-டூர் ஹெச்1, செலேரியோ – டூர் ஹெ2, டிசையர் -டூர் எஸ், எர்டிகா – டூர் எம் மற்றும் ஈகோ – டூர் வி உள்ளிட்ட பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை இதன் ரகங்களில் அடங்கும்.
இதுப்பற்றி மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் செயல் இயக்குன ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘எங்கள் வர்த்தக சேனல் வாடிக்கையாளர்களின் பல்வகைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் அன்றாட வணிகம், வாழ்வாதாரம், லாபம் ஆகியவற்றில் வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எங்கள் வர்த்தக வாகனங்களின் பல்துறை பயன்பாடு மற்றும் குறைந்த செலவு காரணமாக, ஒவ்வொரு வாடிக்கையாளரும் மதிப்புக்-கூட்டப்பட்ட சலுகைகளால் திருப்தி அடைகின்றனர். எங்கள் வர்த்தகப் பொருள்களின் வலுவான வகையும், விரிவான விற்பனை மற்றும் சேவை வலைப்பணியும், எங்கள் நம்பகத்தன்மை மிக்க வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் தருகிறது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|