பதிவு செய்த நாள்
30 மார்2021
19:56
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, ‘என்.ஐ.என்.எல்.,’ எனும், ‘நீலாச்சல் இஸ்பத் நிகம்’ நிறுவனத்தை, முற்றிலும் தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்நிறுவன பங்குகளை வாங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பல நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியதாவது:என்.ஐ.என்.எல்., நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள், தங்களின் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கான கடைசி நாள், 29ம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிறுவன பங்குகளை வாங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில், இந்நிறுவனத்தின் பங்குகளை விற்று, முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. விரைவில் இந்நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, முற்றிலும் தனியாமயமாக்கப்பட்டுவிடும்.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|