பதிவு செய்த நாள்
30 மார்2021
20:07
புதுடில்லி:இன்றுடன் முடிவடையும், நடப்பு நிதியாண்டில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சென்செக்ஸ், 66 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
கொரோனா பரவல் மற்றும் அதன் காரணமான பொருளாதார பாதிப்பு ஆகியவை இருந்த போதிலும், இந்த நிதியாண்டில், பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை அள்ளிக் கொடுத்துள்ளன.குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 66 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை கொடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், சென்செக்ஸ், 19 ஆயிரத்து, 540 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. அதாவது, 66.30 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், மிக அதிக ஏற்ற இறக்கத்தையும் சந்தை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஓராண்டில் இல்லாத அளவுக்கு, 27 ஆயிரத்து 500 புள்ளிகளாக சரிவைக் கண்டது. அதன் பிறகு வந்த காலகட்டத்தில், சந்தை எழுச்சி கண்டு, கடந்த பிப்ரவரி, 16ம் தேதியன்று, அதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, 52 ஆயிரத்து, 517 புள்ளிகள் எனும் புதிய சாதனை உயரத்தை தொட்டது.
விரைவான பொருளாதார மீட்சி, கொரோனாவுக்கான தடுப்பூசி வரவு, அன்னிய முதலீடு போன்ற காரணங்களால், பங்குச் சந்தையின் காளை ஓட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|