பத்திர  வெளியீடு மூலம் ரூ.1,375 கோடி நிதி திரட்டிய ஐ.ஆர்.எப்.சி பத்திர வெளியீடு மூலம் ரூ.1,375 கோடி நிதி திரட்டிய ஐ.ஆர்.எப்.சி ...  அரசின் கடன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு அரசின் கடன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு ...
இந்தியர்களின் டிஜிட்டல் திறனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2021
19:26

புதுடில்லி:இந்தியாவில், கொரோனா காலத்தில், 30 லட்சம் பேர் ‘டிஜிட்டல்’ திறன் பெறுவதற்கு உதவியிருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகின், 249 நாடுகளில், கிட்டத்தட்ட, 3 கோடி பேருக்கு மேல் கொரோனா காலத்தில், டிஜிட்டல் திறன் பெறுவதற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டும், 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஜூலையில், 2.5 கோடி பேரை டிஜிட்டல் திறன் மிக்கவர்களாக மாற்ற உதவுவது என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, அதைவிட அதிகமானோர் பலன் பெற்றுள்ளனர்.

மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனம், நடப்பு ஆண்டில் திறன் அடிப்படையிலான ஆட்களை பணியில் அமர்த்துவதற்கு உலகளவில், 2.5 லட்சம் நிறுவனங்களுக்கு உதவும்.பணி நீக்கம் செய்யப்பட்ட ஆலைத் தொழிலாளர்கள் முதல், சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றியவர்கள், லாரி ஓட்டுனர்கள் வரை, லட்சக்கணக்கானவர்கள் கொரோனா காலத்தில் ‘கிட்கப், லிங்க்ட்இன் மைக்ரோசாப்ட்’ ஆகியவற்றின் மூலம் ‘ஆன்லைன்’ வாயிலாக கற்கத் துவங்கினர். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை, திட்ட மேலாண்மை, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட, பல பணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.

கொரோனா பாதிப்புக்கு பிறகு, திறன் என்பது உலகின் புதிய பணமாகவே மாறியிருக்கிறது. இந்தியாவில், மைக்ரோ சாப்ட் நிறுவனம் அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து, நாட்டில் வலுவான ஒரு டிஜிட்டல் திறன் சூழலை உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு, மைக்ரோசாப்ட் இந்தியாவில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கைகோர்த்து, டிஜிட்டல் திறன் கொண்ட ஒரு லட்சம் இளம் பெண்களை மேம்படுத்தியது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)