பதிவு செய்த நாள்
31 மார்2021
19:44
சென்னை:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் இருசக்கர வாகன ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகளவில் இருக்கும் முக்கியமான சந்தைகளில், இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்து உள்ளதை அடுத்து, இந்த சாதனையை எட்ட முடிந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு கூறியுள்ளதாவது:இது சிறப்பான சந்தர்ப்பம் ஆகும். மார்ச் மாதத்தில், உலக நாடுகளில், ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனை என்ற நிலையை எட்டியிருக்கிறோம்.
கடந்த சில மாதங்களாக, எங்களின் பிரீமிய வாகன மாற்றத்தில் உலகளவில் நல்ல வளர்ச்சியை கண்டோம். இந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதுடன், எங்கள் தயாரிப்புகள் வாயிலாக மேலும் முன்னேற்றத்தை ஏற் படுத்துவோம்.தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது என்பது, எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் மிகவும் முக்கியமானது.‘டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்கி வருகிறது. டி.வி.எஸ்., அப்பாச்சி; டி.வி.எஸ்.,எச்.எல்.எக்ஸ்; டி.வி.எஸ்., ஸ்ட்ரைக்கர்’ ஆகிய வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|