இந்தியர்களின் டிஜிட்டல் திறனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி இந்தியர்களின் டிஜிட்டல் திறனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி ...  மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை ...
அரசின் கடன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2021
20:26

புதுடில்லி:மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, அவசர கால கடன் உத்தரவாத திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில், குறிப்பிட்ட கடன் தொகையை, பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய மூன்றாம் கட்டத்தில், விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது, மூன்று லட்சம் கோடி ரூபாய் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை, அல்லது, ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)