பதிவு செய்த நாள்
01 ஏப்2021
20:26
புதுடில்லி:மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, அவசர கால கடன் உத்தரவாத திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில், குறிப்பிட்ட கடன் தொகையை, பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய மூன்றாம் கட்டத்தில், விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது, மூன்று லட்சம் கோடி ரூபாய் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை, அல்லது, ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|