பதிவு செய்த நாள்
01 ஏப்2021
20:29
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், இதுவரை இல்லாத அளவுக்கு, 1.23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது இது, 27 சதவீத அதிகரிப்பாகும் என, மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1.23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ந்து, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
போலி ‘பில்’களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரித்தது; மோசடிகளை தவிர்க்க, தீவிர ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டது போன்ற காரணங்களால், வசூல் அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்ததில் இருந்து இல்லாத அளவுக்கு, அதிகமாக வசூல் ஆகியுள்ளது.
மொத்தம், 1.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கும் நிலையில், இதில் மத்திய ஜி.எஸ்.டி., 22 ஆயிரத்து, 973 கோடி ரூபாயாகவும்; மாநில ஜி.எஸ்.டி., 29 ஆயிரத்து, 329 கோடி ரூபாயாகவும்; ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி, 62 ஆயிரத்து, 842 கோடி ரூபாயாகவும் உள்ளது.இவ்வாறு மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|