மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை ...  அனில் அம்பானியின்  ‘ரிலையன்ஸ் சென்டர்’  பறிபோனது அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் சென்டர்’ பறிபோனது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ‘செவன் ஐலேண்ட்ஸ் ஷிப்பிங்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2021
20:34

புதுடில்லி:கப்பல் வாயிலான சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள, ‘செவன் ஐலேண்ட்ஸ் ஷிப்பிங்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்நிறுவனம் செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. இதையடுத்து இப்போது அனுமதி கிடைத்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 200 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

திரட்டப்படும் நிதியிலிருந்து, பெரிய கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றையும், நடுத்தர அளவிலான ஒரு கப்பலையும் வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றின் மதிப்பு, 352.43 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பும் இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

கடந்த, 2017ல் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்து, அனுமதியும் பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை.ஒரே ஒரு கப்பலுடன், கடந்த 2003ம் ஆண்டில் இந்நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை துவங்கியது. தற்போது இந் நிறுவனத்தின் வசம், 20 கப்பல்கள் உள்ளன. கடந்த, 18 ஆண்டுகளில் இந்நிறுவனம், 40 கப்பல்களை வாங்கி இருக்கிறது; 20 கப்பல்களை விற்பனை செய்திருக்கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)