பதிவு செய்த நாள்
01 ஏப்2021
20:34
புதுடில்லி:கப்பல் வாயிலான சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள, ‘செவன் ஐலேண்ட்ஸ் ஷிப்பிங்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்நிறுவனம் செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. இதையடுத்து இப்போது அனுமதி கிடைத்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 200 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியிலிருந்து, பெரிய கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றையும், நடுத்தர அளவிலான ஒரு கப்பலையும் வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றின் மதிப்பு, 352.43 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பும் இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த, 2017ல் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்து, அனுமதியும் பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை.ஒரே ஒரு கப்பலுடன், கடந்த 2003ம் ஆண்டில் இந்நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை துவங்கியது. தற்போது இந் நிறுவனத்தின் வசம், 20 கப்பல்கள் உள்ளன. கடந்த, 18 ஆண்டுகளில் இந்நிறுவனம், 40 கப்பல்களை வாங்கி இருக்கிறது; 20 கப்பல்களை விற்பனை செய்திருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|