பதிவு செய்த நாள்
02 ஏப்2021
19:50
புதுடில்லி:‘இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறும் திட்டமில்லை’ என, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த, 2020, ஏப்ரலில், பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை திடீரென மூடியது. இதனால் இத் திட்டங்களில் முதலீடு செய்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான–செபி விசாரணை நடத்தி வருகிறது.
‘இந்த விசாரணை நியாயமாக, வெளிப்படையாக, துாதரக ரீதியில் நடைபெற வேண்டும்’ என, அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனமான, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, விசாரணையில் உரிய வாய்ப்பு அளிக்கத் தவறினால், இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறுவதாக, பிராங்ளின், அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், பிராங்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவன தலைவர், சஞ்சய் சாப்ரே, முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிறுவனத்திற்கு, இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை. அவ்வாறு வெளியேற உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. ஊடகங்களில் ஊக அடிப்படையில் செய்திகள் வெளியாகி உள்ளன. அது தவறு. நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|