அனில் அம்பானியின்  ‘ரிலையன்ஸ் சென்டர்’  பறிபோனது அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் சென்டர்’ பறிபோனது ... ஏற்றுமதியில் புதிய சாதனை மார்ச்சில் 58 சதவீத வளர்ச்சி ஏற்றுமதியில் புதிய சாதனை மார்ச்சில் 58 சதவீத வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம்: பிராங்ளின் டெம்பிள்டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
19:50

புதுடில்லி:‘இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறும் திட்டமில்லை’ என, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த, 2020, ஏப்ரலில், பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு மியூச்சுவல் பண்டு திட்டங்களை திடீரென மூடியது. இதனால் இத் திட்டங்களில் முதலீடு செய்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான–செபி விசாரணை நடத்தி வருகிறது.

‘இந்த விசாரணை நியாயமாக, வெளிப்படையாக, துாதரக ரீதியில் நடைபெற வேண்டும்’ என, அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனமான, பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, விசாரணையில் உரிய வாய்ப்பு அளிக்கத் தவறினால், இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறுவதாக, பிராங்ளின், அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், பிராங்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவன தலைவர், சஞ்சய் சாப்ரே, முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிறுவனத்திற்கு, இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை. அவ்வாறு வெளியேற உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. ஊடகங்களில் ஊக அடிப்படையில் செய்திகள் வெளியாகி உள்ளன. அது தவறு. நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)