அனில் அம்பானியின்  ‘ரிலையன்ஸ் சென்டர்’  பறிபோனது அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் சென்டர்’ பறிபோனது ...  ‘ரிலையன்ஸ் ஓ2சி’ நிறுவனம் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் ‘ரிலையன்ஸ் ஓ2சி’ நிறுவனம் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் ...
ஏற்றுமதியில் புதிய சாதனை மார்ச்சில் 58 சதவீத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
19:52

புதுடில்லி:கடந்த மார்ச்சில், நாட்டின் ஏற்றுமதி, சாதனை அளவாக, 58.23 சதவீதம் உயர்ந்து, 2.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முதன் முறையாக, ஒரே மாதத்தில் இத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.


மருந்து, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகள், ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில், இறக்குமதி, 52.89 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து,61ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2020 மார்ச்சில், 2 லட்சத்து, 36 கோடி ரூபாயாக இருந்தது.

இதே காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 74 ஆயிரத்து, 850 கோடியில் இருந்து, 1 லட்சத்து, 6 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி, 1.22 சதவீதம் உயர்ந்து, 76ஆயிரத்து, 275 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், ஏற்றுமதி, 21 லட்சத்து, 76ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 – 20ம் நிதியாண்டின், 23 லட்சத்து, 50ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, 7.4 சதவீதம் குறைவு.இதே காலத்தில், இறக்குமதி, 18 சதவீதம் குறைந்து, 35 லட்சத்து,60ஆயிரம் கோடியில் இருந்து, 29லட்சத்து,16ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதி, 37 சதவீதம் குறைந்து, 6 லட்சத்து, 16ஆயிரம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.

வளர்ச்சியில் உச்சம்

கடந்த மார்ச்சில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில், ஏற்றுமதி, 58.23 சதவீதம் உயர்ந்து, 2.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பிரதமர்,மோடியின் கொள்கைகள், கொரோனா தாக்கத்திற்கு இடையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல துணைபுரிந்து வருகிறது.

–பியுஷ் கோயல்,

மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)