பதிவு செய்த நாள்
02 ஏப்2021
19:52
புதுடில்லி:கடந்த மார்ச்சில், நாட்டின் ஏற்றுமதி, சாதனை அளவாக, 58.23 சதவீதம் உயர்ந்து, 2.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முதன் முறையாக, ஒரே மாதத்தில் இத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மருந்து, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகள், ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில், இறக்குமதி, 52.89 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து,61ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2020 மார்ச்சில், 2 லட்சத்து, 36 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 74 ஆயிரத்து, 850 கோடியில் இருந்து, 1 லட்சத்து, 6 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி, 1.22 சதவீதம் உயர்ந்து, 76ஆயிரத்து, 275 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், ஏற்றுமதி, 21 லட்சத்து, 76ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 – 20ம் நிதியாண்டின், 23 லட்சத்து, 50ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, 7.4 சதவீதம் குறைவு.இதே காலத்தில், இறக்குமதி, 18 சதவீதம் குறைந்து, 35 லட்சத்து,60ஆயிரம் கோடியில் இருந்து, 29லட்சத்து,16ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதி, 37 சதவீதம் குறைந்து, 6 லட்சத்து, 16ஆயிரம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
வளர்ச்சியில் உச்சம்
கடந்த மார்ச்சில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில், ஏற்றுமதி, 58.23 சதவீதம் உயர்ந்து, 2.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பிரதமர்,மோடியின் கொள்கைகள், கொரோனா தாக்கத்திற்கு இடையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல துணைபுரிந்து வருகிறது.
–பியுஷ் கோயல்,
மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|