பதிவு செய்த நாள்
02 ஏப்2021
19:55
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் எண்ணெய் சுத்திகரிப்பு முதல் ரசாயன உற்பத்தி வரையிலான பிரிவுகளை, ‘ரிலையன்ஸ் ஓ2சி’ என்ற தனி நிறுவனத்தின் கீழ் கொண்டு வர உள்ளது.
இந்த திட்டம் குறித்த தீர்மானத்திற்கு, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலைக் கோருவதற் கான கூட்டம், மும்பையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கு முதலீட்டாளர்கள், மின்னணு முறையில் வாக்களித்தனர்.
இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான–செபிக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து, எண்ணெய் சுத்திகரிப்பு முதல் ரசாயன உற்பத்தி வரையிலான பிரிவுகளை, புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டு வர, கூட்டத்தில் பங்கேற்ற பங்கு முதலீட்டாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்த பின், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, நிதி, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் மட்டும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கவனம் செலுத்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|