பதிவு செய்த நாள்
02 ஏப்2021
19:58
புதுடில்லி:ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் நிறுவனம், 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய் மதிப்பிலான, பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணி முடிப்பு காலத்தை, ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
கடந்த, 2020, ஆக., 29ல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஒப்பந்தத்திற்கு, சந்தை போட்டி கண்காணிப்பு ஆணையம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தத்தை, பியூச்சர் குழுமத்தில், 4.8 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ள, அமேசான் இந்தியா எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
இதை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் தீர்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு மற்றும் பங்குதாரர்கள் அளிக்கும் ஒப்புதலை பொறுத்து தான், ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது தெரியவரும்.
இந்நிலையில், ஒப்பந்தம் தொடர்பான பணிகளை இறுதி செய்வதற்கான காலக் கெடு, கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்தம் தொடர்பான ஆவணப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதால், பணி முடிப்பு காலம், வரும், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்குள், அமேசான் தொடர்ந்த வழக்கில், இறுதி தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|