‘ரிலையன்ஸ் ஓ2சி’ நிறுவனம் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் ‘ரிலையன்ஸ் ஓ2சி’ நிறுவனம் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் ...  உணவு பதப்படுத்தும்  துறையினர் வரவேற்பு உணவு பதப்படுத்தும் துறையினர் வரவேற்பு ...
ரிலையன்ஸ்–பியூச்சர் ஒப்பந்த காலம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
19:58

புதுடில்லி:ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் நிறுவனம், 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய் மதிப்பிலான, பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணி முடிப்பு காலத்தை, ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

கடந்த, 2020, ஆக., 29ல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஒப்பந்தத்திற்கு, சந்தை போட்டி கண்காணிப்பு ஆணையம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தத்தை, பியூச்சர் குழுமத்தில், 4.8 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ள, அமேசான் இந்தியா எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

இதை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் தீர்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு மற்றும் பங்குதாரர்கள் அளிக்கும் ஒப்புதலை பொறுத்து தான், ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது தெரியவரும்.

இந்நிலையில், ஒப்பந்தம் தொடர்பான பணிகளை இறுதி செய்வதற்கான காலக் கெடு, கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்பந்தம் தொடர்பான ஆவணப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதால், பணி முடிப்பு காலம், வரும், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்குள், அமேசான் தொடர்ந்த வழக்கில், இறுதி தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)