உணவு பதப்படுத்தும்  துறையினர் வரவேற்பு உணவு பதப்படுத்தும் துறையினர் வரவேற்பு ...  ‘சிங்காரி’ வீடியோ செயலியில் சல்மான் கான் முதலீடு ‘சிங்காரி’ வீடியோ செயலியில் சல்மான் கான் முதலீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஓசூர் ‘ஏத்தர்’ ஆலை திறன் மும்மடங்காக அதிகரிக்கப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2021
20:27

புதுடில்லி:மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான, ‘ஏத்தர் எனர்ஜி’ அதனுடைய தயாரிப்பை, அடுத்த நிதியாண்டில், மும்மடங்கு அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில், ஏத்தர் நிறுவனத்துக்கான ஆலை அமைந்துள்ளது. தற்போது இந்த ஆலை, ஆண்டு ஒன்றுக்கு, ஒரு லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாக இருக்கிறது. இங்கு, ‘ஏத்தர் 450 எக்ஸ்.,’ எனும், ஒரே ஒரு மாடல் ஸ்கூட்டர் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் விலை கிட்டத்தட்ட, 1.5 லட்சம் ரூபாய் ஆகிறது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தருண் மேத்தா கூறியதாவது:கடந்த பிப்ரவரியில் துவக்கப்பட்ட எங்களுடைய ஓசூர் ஆலையிலிருந்து, மாதம் ஒன்றுக்கு, 92 ஆயிரம் வாகனங்களை தயாரிக்க இயலும். தற்போது, தேவைகள் மற்றும் விசாரணைகள் அதிகரித்து வருவதை அடுத்து, தயாரிப்பை, அடுத்த நிதியாண்டில் மும்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஓசூர் ஆலையில் ஆண்டுக்கு, 5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் அளவுக்கு விஸ்தரிக்க தேவையான நில வசதி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஏத்தர் நிறுவனம் இதுவரை ஓசூரில், 130 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டு உள்ளது. பெங்களூருவில் உள்ள சிறிய ஆலையில், 2018ம் ஆண்டில் முதன் முதலாக, ‘ஏத்தர் 450’ எனும் வாகனத்தை தயாரித்து வெளியிட்டது. ஆனால் பின்னர் அந்த வாகன தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மின்சார இருசக்கர வாகன துறையில், இந்தியாவில், மொத்தம், 20 நிறுவனங்கள் உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)