பதிவு செய்த நாள்
05 ஏப்2021
19:38
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் உற்சாகமான பயண உணர்வை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தின் திருப்பூரில் ப்ரீமியம் ரக பெரிய இரு சக்கர வாகன வர்த்தக நிலையமான ஹோண்டா பிக்விங்-ஐ தொடங்குகிறது.
இந்த நிதியாண்டின் முடிவிற்குள் நாடு முழுவதும் பரவலாக 50 பிக்விங் மையங்களை விரிவுபடுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. கருப்பு அண்ட் வெள்ளை மோனோக்ரோமேடிக் வண்ணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிங்விங் அரங்கில் வாகனங்கள் அவற்றின் முழு சிறப்புகளோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் பயண உற்சாகத்தை இரட்டிப்பாக்கவும், புதிய வாய்ப்புகளை மேம்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட இவ்விடத்தில் பல்வேறுவிதமான உதிரிபாகங்களும் ரைடிங் கியர்களும் கூட கிடைக்கும்.
இது குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட்டின் விற்பனை அண்ட் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர், யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், “திருப்பூரில் பிக்விங் தொடங்கப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய ப்ரீமியம் விற்பனை நிலையம் மூலமாக, திருப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டாவின் உற்சாகமளிக்கும் மோட்டார் சைக்கிள்கள் எளிதில் கிடைக்க செய்வதை இலக்காக கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் ’பிக்விங் டாப்லைன்’ மூலமாக ஹோண்டாவின் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் சில்லறை விற்பனை முறையிலான வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. டாப்லைன் விற்பனை நிலையத்தில் சிபி350 ஆர்எஸ், ஹைனெஸ்-சிபி350, புதிய சிபி500எக்ஸ், சிபிஆர்650ஆர், சிபி650ஆர், சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேட், சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேட் எஸ்பி, அட்வெஞ்சர் டூரர் ஆஃப்ரிக்கா ட்வின் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் போன்ற ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் வகை தயாரிப்புகள் கிடைக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|